விவசாயிகள் போராட்டம்: சம்பு தடுப்பணையில் மர்ம நபர்கள் தாக்குதல் - பாதுகாப்பு படையினர் காயம்!

விவசாயிகள் போராட்டம்: சம்பு தடுப்பணையில் மர்ம நபர்கள் தாக்குதல் - பாதுகாப்பு படையினர் காயம்!

Published : Feb 16, 2024, 05:51 PM IST

விவசாயிகள் போராட்டம் என்ற போர்வையில் சம்பு தடுப்பணையில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 25 பேர் காயமடைந்துள்ளனர்

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஓராண்டு காலத்துக்கு விவசாயிகளின் போராட்டம் நீடித்த நிலையில், தற்போது மீண்டும் போராட்டத்தை விவசாயிகள் கையில் எடுத்துள்ளனர். அதேசமயம், சமூக சொத்துகளை சேதப்படுத்தவும் விவசாயிகள் போராட்டத்தை சிலர் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், விவசாயிகள் போராட்டம் என்ற போர்வையில், சம்பு தடுப்பணையில் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் அதனை சேதப்படுத்தினர். அப்போது, போலீசார் மீது மர்மநபர்கள் தொடர்ந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், போலீசார் 18 பேர், துணை ராணுவப்படை வீரர்கள் 7 பேர் என மொத்தம் 25 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!