காட்டு யானையுடன் செல்பி; சுற்றுலா பயணியை தலைதெறிக்க ஓடவிட்ட ஒற்றை யானை - கேரளாவில் பரபரப்பு

Feb 2, 2024, 9:48 AM IST

கேரளா மாநிலம் வயநாடு பத்தேரி அருகில் உள்ள முத்தங்கா வனப்பகுதியில் நின்ற ஒற்றை யானையை புகைப்படம் எடுக்க வாகனத்தை நிறுத்திய சுற்றுலாப் பயணிகள் இருவரை ஒற்றை யானை துரத்தியது. இதில் ஒருவர் கீழே விழுந்தும் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.