பட்டமளிப்பு விழா மேடையிலேயே சட்ட ஆவண நகலை கிழித்தெறிந்த மாணவி... பல்கலைக் கழக துணைவேந்தர் கண்முன் நடந்த பரபரப்பு வீடியோ..!
கொல்கத்தா :ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. அப்போது விழா மேடை ஏறிய மாணவி தேபஸ்மிதா சவுத்ரி என்பவர் தனக்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை பல்கலைக் கழக துணைவேந்தரிடம் புன்னகையுடன் பெற்றுக்கொண்டார். பின்னர், அவற்றை மேடையிலேயே வைத்த மாணவி திடிரென தன் கையில் கொண்டு வந்திருந்த குடியுரிமை திருத்த சட்ட ஆவண நகலை கிழித்தெறிந்தார்.