ஜம்முவில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள்; சொந்த ஊரில் கண்ணீர்மல்க இறுதி மரியாதை

Jul 17, 2024, 3:22 PM IST

ஜம்மு மற்றும் காஷ்மீரின் தோடாவில் நேற்று பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையின் போது ஒரு அதிகாரி உட்பட 4 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் அஜய் சிங் நருகா மற்றும் பிஜேந்திர குமார் ஆகியோரின் உடல்கள் ஜெய்ப்பூருக்கு கொண்டு வரப்பட்டு, ஜுன்ஜுனுவில் உள்ள பைசாவதா மற்றும் டுமோலி ஆகிய அவர்களது சொந்த கிராமங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.