Ayodhya Ramar Temple | அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள பொறியாளர் சேத்தன், ஏசியாநெட் சுவர்ணா நியூஸ் ஆசிரியர் அஜித் ஹனமக்கனவர் உடனான நேர்காணலின் போது, தனித்துவமான கட்டுமான பாணி, குறிப்பாக கல் செதுக்குதல் மற்றும் சிற்பம் குறித்து விவரிக்கிறார்.
அயோத்தியில் கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டு வரும் பொறியாளர் சேத்தன் கூறுகையில், “ராமர் கோயில் கட்டும் பாணி, குறிப்பாக கல் செதுக்குதல் மற்றும் சிற்பம் எனக்கு முற்றிலும் புதியது. டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் உடன் பணிபுரியும் சேத்தன், கோவில் கட்டுமானத்தில் தானும் ஒரு பகுதியாக இருந்த அனுபவத்தை விவரிக்கிறார்.