குஜராத்தில் 160 கி.மீ. வேகத்தில் சீறி பாய்ந்த சொகுசு கார்; 9 பேர் பரிதாப பலி

குஜராத்தில் 160 கி.மீ. வேகத்தில் சீறி பாய்ந்த சொகுசு கார்; 9 பேர் பரிதாப பலி

Published : Jul 20, 2023, 05:32 PM IST

குஜராத்தில் பாலம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தை சரி செய்துகொண்டிருந்த நபர்கள் மீது சொகுசு கார் 160 கி.மீ. வேகத்தில் மோதிய விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே சார்கெஜ், காந்திநகர் நெடுஞ்சாலையில் உள்ள இஸ்கான் மேம்பாலத்தில் நள்ளிரவு 1 மணியளவில் டிராக்டர் ஒன்று பாலத்தின் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனைத் தொடர்ந்து விபத்தில் சிக்கிய டிராக்டரை அப்பகுதி மக்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் அவ்வழியாக சென்றவர்கள் பலரும் விபத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு கார் 160 கி.மீ. வேகத்தில் கூட்டத்திற்குள் புகுந்தது. இந்த விபத்தில் காவலர் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!
Read more