ஆந்திர மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த ஆட்டோ லாரி மீது மோதி தூக்கி வீசப்பட்டதில் 6 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சங்கம் சரத் திரையரங்கம் அருகே  பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோ லாரியின் பக்கவாட்டில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோ நசுங்கி அதில் இருந்து குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர். விபத்தில் ஆட்டோவில் பயணித்த ஆறு குழந்தைகள் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களில் இரண்டு பேர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த உடன் அங்கு வந்து சேர்ந்த போலீசார் குழந்தைகளை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களில் இருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து பற்றி வழக்கு பதிவு செய்துள்ள விசாகப்பட்டினம் போலீசார்  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!
Read more