கனமழையால் நகைக்கடையில் இருந்து அடித்துச் செல்லப்பட்ட 2.50 கோடி மதிப்பிலான நகைகள்

May 26, 2023, 6:40 PM IST

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 2 தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் சுரங்க பகுதி, தாழ்வான பகுதி, சாலைகள் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி காணப்பட்டது

இந்த மழையால் 8பேர் வரை உயிரிழந்த நிலையில், பெங்களூர் பெருமாநகராட்சி மல்லேஷ்வரம் பகுதியில் தரைதளத்தில் இருந்த தங்கநகை கடையில் அதிகப்படியான மழையால் 2.50கோடி ரூபாய் மதிப்பிலான தங்கநகைகள் நீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.