
மாதம்பட்டியும், நானும் இணைந்து வாழ்ந்ததற்கான ஆதாரங்களை காவல் துறையினரிடம் வழங்கி உள்ளேன். என்னென்ன ஆதாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை என்னால் கூற முடியாது. விசாரணை நடுநிலையோடு நடைபெறும் என நம்புகிறேன். சமூக ஊடகங்களில் என்னைப் பற்றி அவதூறான கருத்துகளை பலரும் பரப்பி வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். வியூஸ் வருகிறது என்பதற்காக எதுவும் தெரியாமல் ஏதேதோ பேசக் கூடாது.