தியேட்டர்காரங்கள மிரட்டுறாங்க.. கவுண்டம்பாளையம் ரிலீஸ் டிலே.. முதல்வரை சந்திச்சு பேசணும் - குமுறும் Ranjith!

Jul 4, 2024, 11:06 PM IST

கோவை மாநகர காவல் ஆணையரிடம் படத்தின் எதிர்ப்பு மற்றும் மிரட்டல் தொடர்பாக புகார் மனு அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் மற்றும் இயக்குனர் ரஞ்சித், நாளை திரைக்கு வரவிருந்த தனது "கவுண்டம்பாளையம்" படம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பகீர் தகவல் ஒன்றை அளித்துள்ளார். 

இந்த படத்திற்காக புக்கிங் செய்து காத்திருந்தவர்களிடம் அவர் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் இந்த படம் வெளிவரக்கூடாது என்பதில் பலர் முனைப்போடு இருப்பதாகவும், இதனால் இந்த படத்தை வெளியிட தயாராக இருந்த பல தியேட்டர் உரிமையாளர்களை அவர்கள் மிரட்டி படத்தை எடுக்கக்கூடாது என்று கூறியுள்ளதாகவும் ரஞ்சித் கூறியுள்ளார். 

நாடக காதலை பற்றியும், பெற்றோர்களின் வலியையும் படமாக எடுத்துள்ளேன். இதற்கு பல ஆனால் இதற்கு பல இடங்களிலிருந்து எதிர்ப்பு வருவதகாவும் அவர் கூறினார். ஒரு படம் எடுப்பது எளிதல்ல, ஆனால் இந்த படம் உருவாக உழைத்த அனைவருக்கும் எனது நன்றிகள், நான் அரசியல் வாதி கிடையாது, இந்த படத்தின் வெற்றிதான் என்னை எதிர்பவர்களுக்கு நான் சொல்லும் பதில் என்றும் அவர் கூறினார். 

செண்சர் சான்றிதழ் வாங்கியும் இந்த படத்தை என்னால் வெளியிட முடியவில்லை. அதே நேரம் என்னை யார் எதிர்க்கிறார்கள் என்பதையும் நான் சொல்லவிரும்பவில்லை. தமிழக அரசின் அனுமதி பெற்று இந்த படத்தை விரைவில் வெளியிடுவேன், இனி ஒவ்வொரு முடிவையும்  கடவுள் பார்த்துகொள்வார் என்றார் அவர்.