பெண் குழந்தையை பெற்றெடுத்த இசக்கி; குழந்தையை பார்க்க மறுக்கும் சண்முகம்: அண்ணா சீரியல்!

Published : Oct 08, 2025, 07:29 PM IST
Anna Serial Update

சுருக்கம்

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் இசக்கி வீரா இந்த வீட்டுக்கு வராமல் நான் அந்த வீட்டுக்கு வர மாட்டேன் என்று சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அண்ணா சீரியல்

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் உங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் இசக்கி வீரா இந்த வீட்டுக்கு வராமல் நான் அந்த வீட்டுக்கு வர மாட்டேன் என்று சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது சண்முகம் வீரா இந்த வீட்டுக்கு வாழ வரமாட்டா என்று சொல்லி அங்கிருந்து கிளம்பிச் செல்ல இசக்கி கண் கலங்கி நிற்க அவளுக்கு பிரசவ வலி வந்து விடுகிறது. இதையடுத்து இசக்கியை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வருகின்றனர்.

நல்ல வேளை... பிக்பாஸ் வாய்ப்பை நிராகரித்த சீரியல் நடிகையின் ஷாக்கிங் பதிவு!

பரணிக்கு போன் செய்து இசக்கி பிரசவ வலி வந்து விட்ட விஷயத்தை சொல்ல பரணி கிளம்பி வருவதாக சொல்கிறாள். அதற்குள் இசக்கி அழகான பெண் குழந்தையை பெற்றெடுக்கிறாள். பரணி அங்கு வர குழந்தையை பார்த்து எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். ஆனால் இசக்கி அண்ணன் வந்து என் குழந்தையை தூக்காமல் பால் கொடுக்க மாட்டேன் என்று அடம்பிடிக்க பரணி சண்முகத்துக்கு போன் போட்டு வர சொல்ல அவன் நான் வரமாட்டேன் என்று மறுக்கிறான். பிறகு வீடியோ காலில் குழந்தையின் முகத்தை காட்டி இங்க பாரு உன் அம்மாவே வந்து பிறந்து இருக்கா என்று சொல்ல சண்முகம் எமோஷனலாகி கண்கலங்கி ஹாஸ்பிடல் வருகிறான்.

தனது கையால் குழந்தையை தூக்கி கொஞ்ச இசக்கி சந்தோஷம் அடைகிறாள். இப்படியான நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

பிக் பாஸ் வீட்டு தலைக்கு காத்திருக்கும் ராஜ மரியாதை... கேப்டன்சி டாஸ்க் ஜெயிச்சா இவ்வளவு சலுகைகளா?

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

துருப்புச்சீட்டாக மாறிய விசாலாட்சி! ஆதி குணசேகரனை காப்பாற்றுவாரா? கம்பி எண்ண வைப்பாரா? எதிர்நீச்சல் தொடர்கிறது
கிரிஷை ஏன்டி கடத்த சொன்ன... விஜயாவை பொழந்துகட்டிய அண்ணாமலை - சிறகடிக்க ஆசை சீரியலில் செம சம்பவம்