முகத்தில் அறைந்தார் போல..கோபிக்கு டோஸ் கொடுத்த பாக்கியலட்சுமி...

By Kanmani PFirst Published Nov 5, 2022, 1:32 PM IST
Highlights

பாக்யா நான் உங்க பொண்டாட்டி கிடையாது என மிரட்டலாக பதிலளிக்க அவரைப் பாராட்டுகிறார். ராமமூர்த்தி இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யாலட்சுமி தொடரில், தற்போது விறுவிறுப்பான காட்சிகள் அரங்கேறி வருகிறது. பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு செல்லும் கோபி ராதிகாவை பார்த்து  இனியா மற்றும் பாக்யா அதிர்ச்சியடைந்தனர். இனியாவின் நண்பர்களின் பெற்றோர்கள் ஏன் உன் தந்தை அவருடன் இருக்கிறார். அவருக்கு மறுமணம் ஆகிவிட்டதா என கேட்டு இனியாவை அழ வைக்கிறார்.

இதைத் தொடர்ந்து ஹோட்டலுக்கு இனியாவை அழைத்து வரும் பாக்யா அவருக்கு பிடித்த உணவுகளை வாங்கிக் கொடுத்திருந்தார். நேற்று இத்துடன் எபிசோட் முடிவடைந்து இருந்தது. இன்று நடந்ததை நினைத்து வருத்தப்படும் அளவுக்கு நம்ம வெட்டியா இல்ல, நீ உன் படிப்பை பாரு என்று கூறுகிறார் பாக்யா. அதற்கு இனியா நீ எப்படிம்மா இவ்வளவு மாறிட்ட என நேற்று கேட்டிருந்தார். இன்று அதே காட்சிகள் காட்டப்படுகிறது. அதை தொடர்ந்து ஆபீசில் அமிர்தாவுடன் பேசும் ஏழில் உங்க வீட்ல என் மேல் எல்லோருக்கும் நம்பிக்கை போயிடுச்சாஎன கேட்க, அதெல்லாம் இல்லை  எனக்கே  நம்பிக்கை இருக்கு. கொஞ்சம் பயப்படுறாங்க என கூறுகிறார். 

தொடர்ந்து அம்மாகிட்ட இத பத்தி பேசினேன் அம்மா கொஞ்ச நாள் கழிச்சு வீட்ல வந்து பேசுறதா சொல்லி இருக்காங்க, நான் எப்போதுமே உன்னை விட்டு போக மாட்டேன். நீ என்னை நம்புறியா இல்ல என கேட்க எனக்கு நம்பிக்கை இருக்கு என கூறுகிறார் எழில. அவள் கைகளை பிடித்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது வரும் வர்ஷினி அதை பார்த்து கடுப்பாகிறார். கோபத்துடன் உள்ளே சென்று விடுகிறார்.

பின்னர் எழில் வீட்டிற்கு செல்லும் வர்ஷினி, தாத்தா பாட்டி சந்திக்கிறார். அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குகிறார். ரொம்ப மரியாதை தெரிஞ்ச பொண்ணு என அவர்கள் அமிர்தாவை பாராட்டுகின்றனர். பின்னர் பாக்யா எங்கு என விசாரிக்கிறார். அமிர்தா ஆபீஸ்க்கு சென்றிருப்பதாக ஜெனி கூறுகிறார். அதன் பின்னர் வர்ஷினி இன்னொரு நாள் வீட்டில் எல்லோரும் இருக்கும்போது வரேன் என கூறிவிட்டு கிளம்புகிறேன். 

அந்த வீட்டில் கோபி இடம் பேசுகிறார் ராதிகா.  உங்கள் பேரை சேர்க்கணும் ரேஷன் கார்டு வேணும்னு கேளுங்க என கூறவும், உங்களுக்கு தைரியமே இல்லை என உசுப்பேத்தி விடுகிறார். இதையடுத்து கோபி நேராக பாக்யா வீட்டுக்கு வருகிறார். அங்கு கோபியை திட்டி அனுப்பி விடுகிறார் ராமமூர்த்தி. பாக்யாவும் அதே நேரத்தில் அங்கு வர அவளிடம் இப்போ ரேஷன் கார்டு கொடுக்க முடியுமா? முடியாதா? என கேட்கிறார் கோபி. அதற்கு பாக்யாவோ கொடுக்க முடியாது என கூறுகிறார்.  பின்னர் கோபி, பாக்யா போய் எடுத்துட்டு வா.. என அதிகார தோணியில் கூறுகிறார். அதற்கு பாக்யா நான் உங்க பொண்டாட்டி கிடையாது என மிரட்டலாக பதிலளிக்க அவரைப் பாராட்டுகிறார். ராமமூர்த்தி இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது. 

click me!