மாரிக்கு தோன்றிய உள்ளுணர்வு; ஹாஸ்பிடல்ல வச்சு ரேவதியை போட்டுத்தள்ள பிளான் – கார்த்திகை தீபம் 2!

Published : Sep 29, 2025, 09:23 PM IST
Karthigai Deepam 2 Serial Today Episode

சுருக்கம்

கார்த்திகை தீபம் 2 சீரியலில் அம்மன் மீது பக்தி கொண்ட மாரிக்கு, ரேவதி தொடர்பாக ஏதோ உள்ளுணர்வு தோன்றவே, அவரை காப்பாற்ற வேண்டும் என்று கார்த்திக்கிடம் சொல்கிறார். அதைப் பற்றி முழுமையாக பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் 2

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் கார்த்திகை தீபம் 2 சீரியலில் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருக்கும் ரேவதிக்கு ஏதோ ஆபத்து வரப் போகிறது என்று மாரி கூறுகிறார். அதைப் பற்றி முழுவதுமாக இந்த தொகுப்பில் பார்க்கலாம். ரோகிணி ஃப்ரண்ட் தான் மாரி. அவர் தான் இப்போது ரேவதிக்கு இரத்தம் கொடுக்க வந்து கொண்டிருக்கிறார்.

ரேவதி உயிருடன் இருப்பது சந்திரகலா மூலமாக மாயாவிற்கு தெரிய வருகிறது. நான் மட்டும் என்னுடைய மகேஷை பிரிந்திருக்கும் சூழல் நீ மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்கலாம் என்று கூறி ரேவதியை துப்பாக்கியால் சுட்டு தள்ளியவர் தான் மாயா. இப்போது அவர் உயிருடன் இருப்பது தெரிந்து மாறுவேடத்தில் மருத்துவனைக்கு வந்துள்ளார். அங்கு ரேவதி அறைக்கு சென்ற மாயா, அவரை கழுத்தை நெறித்து கொல்ல முயற்சித்துள்ளார்.

Anna Serial: வைஜெயந்திக்கு ஆப்பு ; சாட்சி சொல்ல வந்த முருகன் சிலை - அண்ணா சீரியல் அப்டேட்!

இது தொடர்பாக அம்மனின் தீவிர பக்தையாக இருக்கும் மாரிக்கு தெரிய வருகிறது. இதைப் பற்றி உங்களது மனைவி உயிருக்கு ஆபத்து என்று மட்டும் கார்த்திக்கிடம் கூறுகிறார். அதற்கு கார்த்தி என்ன செய்கிறார் என்ற கேள்வி எழும் நிலையில் அந்த நேரம் பார்த்து சாமுண்டீஸ்வரி வருகை தருகிறார். இதைத் தொடர்ந்து அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றி இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.

War 2 OTT Release : தியேட்டரில் சொதப்பிய வார் 2, ஓடிடியில் ஹிட் அடிக்குமா?

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: அப்பாவை கட்டிப்பிடித்து கதறி அழுத சரவணன் : கூலா வேடிக்கை பார்த்த மயில்!
டபுள் எவிக்‌ஷன்... பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் காலியாகப்போகும் 2 விக்கெட் யார்?