பொழச்சு போகட்டுமுனு தான் விடுறேன்... கோபிக்கு நோஸ் கட் கொடுத்த பாக்கியா

By Kanmani PFirst Published Oct 3, 2022, 11:10 AM IST
Highlights

பொழச்சு போகட்டும் என்றுதான் பொம்பளைங்க சில விஷயங்களை சொல்லாமல் இருக்கிறார்கள். அப்படித்தான் நானும் என்று கோபியின் ஓவர் ஆணவத்தை அடக்கும் விதத்தில் பேசுகிறார் பாக்கியா.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. விவாகரத்திற்கு பிறகு இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்ட கோபி. முன்னதாக இவர்களது திருமணம் என்று தெரியாமல் சமையல் ஆர்டர் எடுத்திருந்த பாக்யாவிற்கும் செல்விக்கும் பிறகு கோபி - ராதிகாவின் திருமணம் என தெரிய வருகிறது. அதிர்ச்சியடைந்த போதிலும் பாக்கியா தனக்கு கிடைத்த முதல் ஆர்டரை நல்லபடியாக முடித்து கொடுத்தே தீருவேன் என தீர்மானமாக இருக்கிறார். பாக்கியாவின் வருகையை எதிர்பார்க்காத கோபி, சமையல் ஆர்டரை கேன்சல் செய்து பாக்கியாவை வெளியில் அனுப்ப கூறுகிறார்.

இதனிடையே கோபியின் தந்தை ராமமூர்த்தியும் மண்டபத்திற்கு வந்து கலாட்டா செய்கிறார். எல்லோரையும் கஷ்டப்படுத்தி நீ மட்டும் சந்தோசமாக இருக்க முடியுமா? என சாபமும் விடுகிறார். ஆனால் கோபி அவரை பிடித்து கீழே தள்ளிவிடுகிறார். பின்னர் பாக்கியா ராமமூர்த்தியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்.

இதனை அடுத்து தந்தையை அடித்து விட்ட காரணத்தால், பெரிய ஹீரோ என்பது போல சீன் போட்டு வருகிறார் கோபி, ஆனாலும் தன்னை மேடையில் அவமானப்படுத்தியதால் மிகுந்த சோகத்தில் இருக்கிறார் ராதிகா. ராதிகா மனம் நொந்துபோய் நிற்பதை பார்த்த கோபி வேண்டுமென்றே பாக்யாவிடம் வம்புக்கு வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு...வெற்றிமாறன் கூறியபடி ராஜ ராஜ சோழன் இந்து கிடையாதா?... பின் எதற்காக சிவன் கோவிலை கட்டினார்? - உண்மை பின்னணி

எங்கே என்ன பெத்த அப்பன், ரூம்ல உட்கார வச்சிருக்கியா? இல்ல பயந்து கிளம்பி போயிட்டாரா? வீட்ல உன்னை ராணி மாதிரி உட்கார வச்சிருந்தேன்.  இன்னைக்கு சமைக்க வந்திருக்க, உன்னை வாழ்க்கை எங்க கொண்டு வந்து விட்டு இருக்கு பாத்தியா? எல்லாரும் உன்னை அனுப்ப முடிவு பண்ணிட்டாங்க. நான்தான் இருக்கட்டும் என சொன்னேன். எதுக்கு தெரியுமா? நான் ராதிகா கழுத்தில் தாலி கட்டுவதை நீ பார்த்து கஷ்டப்படணும். அதை நான் பார்த்து சந்தோசப்படணும் என்று கூறுகிறார் கோபி.

கோபி பேசுவதை எல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த பாக்கியலட்சுமி பேசி முடித்து விட்டீர்களா?  நான் கிளம்பட்டுமா என கேட்டு பல்பு கொடுக்கிறார். பிறகு வாழ்த்துக்கள் எனக்கு கூறுகிறார். 25 வருடமாக பிடிக்காத வாழ்க்கையை வாழ்ந்தீர்கள் என்று சொன்னீர்களே? இப்போ புடிச்ச வாழ்க்கையை வாழ போகிறீர்கள் இதற்காகத்தான் வாழ்த்துக்கள் என கூறுனேன்.  நீங்கள் சொன்ன மாதிரியே பொம்பளைங்க நாங்க சொன்னா உங்களால் தாங்க முடியுமா? அதனால தான் நாங்க சொல்லாம இருக்கோம். என சொல்லி கோபிக்கு மேலும் கடுப்பை ஏற்றுகிறார்.

இதையும் படியுங்கள்... சூப்பர்ஸ்டார் நடிக்க மறுத்த கட்டப்பா கேரக்டர்... சத்யராஜுக்கு கிடைத்த சுவாரஸ்ய பின்னணி

பிடிக்காத வேலை, கஷ்டப்படுறேன் என  யார் சொன்னது. எனக்கு சந்தோசம் கொடுக்கிற வேலையைத்தான் செஞ்சுகிட்டு இருக்கேன் என கூறுகிறார் பாக்கியலட்சுமி. பொழச்சு போகட்டும் என்றுதான் பொம்பளைங்க சில விஷயங்களை சொல்லாமல் இருக்கிறார்கள். அப்படித்தான் நானும் என்று கோபியின் ஓவர் ஆணவத்தை அடக்கும் விதத்தில் பேசுகிறார்.  இதன் பிறகு கோபி - ராதிகா இருவரின் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது.  தன் கண் முன்னே இவை நடப்பதை பார்த்து கோபியிடம் ஆவேசமாக பேசிய போதிலும் மனக்குழப்பத்துடன் அதிர்ந்து போய் தான் இருக்கிறார் பாக்கியா.

click me!