
கிரடிட், டெபிட் கார்டு தேவைப்படாது , பிறந்தது ‘மாற்று வழி” - நிதி ஆயோக் சிஇஓ கருத்து..!
கருப்பு பணம் ஒழிக்கும் நடவடிக்கையாக 5௦௦ மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்பு, மொபைல் போன் மூலமாக , எளிதான முறையில் பண பரிவர்த்தனை செய்வதற்கு ஏதுவாக சென்ற மாதம் `பாரத் இண்டர் பேஸ் பார் மணி (பீம்) செயலியை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்தார்.
இதன் மூலம் நடுத்தர மக்கள் கூட எளிமையான முறையில், பண பரிவர்தனை செய்ய முடியும் என்பது குறிபிடத்தக்கது. மேலும், பீம் செயலியுடன் தற்போது யுபிஐ பின் நம்பரும் ( unified payment interface ) பதிவு செய்து மிக எளிய முறையில் இனி பரிவர்த்தனை செய்யலாம்.
ஏன் கிரடிட், டெபிட் கார்டு தேவை குறையும் ?
மொபைல் போன் மூலம் செயலியை பயன்படுத்தி, பண பரிவர்த்தனை செய்வது நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்து வருவதால், வரும் 2020 ஆம் ஆண்டுக்குள், கிரடிட், டெபிட் கார்டு தேவை குறையும் என நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.