பெண்களாலேயே நடத்தப்படும் முதல் மொபைல் ஸ்டோர் - மாஸ் காட்டிய சாம்சங்

Nandhini Subramanian   | Asianet News
Published : Mar 11, 2022, 09:47 AM IST
பெண்களாலேயே நடத்தப்படும் முதல் மொபைல் ஸ்டோர் - மாஸ் காட்டிய சாம்சங்

சுருக்கம்

சாம்சங் நிறுவனம் முழுக்க முழுக்க பெண் ஊழியர்கள் நடத்தும் தனது முதல் மொபைல் ஸ்டோரை திறந்துள்ளது.

சாம்சங் இந்தியா நிறுவனம் முழுக்க முழுக்க பெண்களாலேயே இயக்கப்படும் முதல் மொபைல் ஸ்டோரை இந்தியாவில் திறந்துள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி புதிய மொபைல் ஸ்டோர் #PoweringDigitalIndia திட்டத்தின் அங்கமாக திறக்கப்பட்டு இருக்கிறது. இந்த மொபைல் ஸ்டோர் ஆமதாபாத் நகரில் துவங்கப்பட்டு இருக்கிறது. 

இந்திய பெண்களின் திறமையை வெளிப்படுத்தவும், சந்தையில் சாம்சங்கின் பங்குகளை அதிகப்படுத்தும் முதல் படியாக இந்த ஸ்டோர் திறக்கப்பட்டு இருக்கிறது. ஆமதாபாத் நகரின் நவ்ரங்கப்புரா பகுதியில் அமைந்துள்ள சாம்சங் ஸ்மார்ட்கஃபே பயனர்களுக்கு முற்றிலும் வித்தியாசமான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும். 

இந்த மொபைல் ஸ்டோர் முழுக்க முழுக்க பெண் ஊழியர்களாலேயே நடத்தப்படுகிறது. புதிய சாம்சங் ஸ்மார்ட்கஃபேவில் ஸ்டோர் மேனேஜர் முதல் சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் கன்சல்டண்ட் வரை அனைத்து பணிகளை மேற்கொள்ளவும் பெண் ஊழியர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். கேலக்ஸி டிவைஸ் டிரெய்னிங் தவிர இங்கு பணியாற்றும் பெண்கள் வியாபாரத்தின் இதர பிரிவுகளிலும் பயிற்சி பெற இருக்கின்றனர். இதில் கஸ்டமர் சர்வீஸ், சேல்ஸ் மற்றும் அக்கவுண்டிங் போன்ற பிரிவுகள் அடங்கும். 

இதுமட்டுமின்றி பெண் ஊழியர்களுக்கு அலுவல் மற்றும் பணி என வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் உதவி செய்ய சாம்சங் WISE (Women in Samsung Electronics) எனும் பெயரில் புது குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழு ஊழியர் ரிசோர்ஸ் குழுவின் கீழ் இயங்குகிறது. 

"முதன் முதலில் பெண்களால் இயக்கப்படும் மொபைல் ஸ்டோரை திறப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறோம். இந்த குழு அடைய இருக்கும் புது மைல்கல்லை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். எங்களின் குழுவில் மேலும் அதிக பெண் ஊழியர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது. நிறுவனம் முழுக்க அடுத்த தலைமுறை பெண் தலைவர்களை உருவாக்குவோம்," என சாம்சங் தென்மேற்கு ஆசிய பிரிவுக்கான தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கென் கேங் தெரிவித்தார். 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Best phones under 10000: ரூ.10 ஆயிரம் ரூபாயில் இவ்வளவு வசதியா? உடனே வாங்க வேண்டிய 4 ஸ்மார்ட்போன்கள்!
Ant Milk : எறும்பு பால்ல இவ்ளோ சத்தா? இதை மனிதர்கள் குடிக்க முடியுமா?