
அதிரடி மறுப்பு
ஜியோ பல ஆபர்களை இலவசமாக வழங்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்நிலையில், நியூ இயர் ஆபரையும் தொடர்ந்து பெற வழிவகை செய்து, மேலும் பல புதிய சலுகையை அறிவித்தது ஜியோ. இதற்கிடையில், ஜியோவை பற்றிய பல வதந்திகள் வர தொடங்கின.
அதிலும் குறிப்பாக , வாய்ஸ் கால்களுக்கு 1000 நிமிடங்களுக்கு பின் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும்,ஆனால் ஜியோ எண்களுக்கு மட்டும் தொடர்ந்து இலவசமாக வாய்ஸ் கால் பெற முடியும் என்றும் குறிப்பிட்டு, செய்திகள் வெளியானது.
மேலும், ரூ.149க்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்றால், ஜியோ பிரைம் திட்டம் தானாக டீஆக்டிவேட் செய்யப்படும் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து பதிலளித்த ஜியோ, இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளது.
மறுப்பு தெரிவித்த ஜியோ
பெய்யான தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்றும், ஜியோ தொடர்ந்து வாய்ஸ் கால்கள் இலவசமாக வழங்கும் எனவும், அறிவித்தபடி சலுகையை இன்னும் ஓராண்டுக்கு பயன்படுத்திக்கொள்ள 99 ரூபாயில் ரீ சார்ஜ் செய்து கொள்ளலாம் என ரிலையன்ஸ் ஜியோ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.