
ஆல்ஃபபெட் நிறுவனம் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு 2022ஆம் ஆண்டுக்கான சம்பளமாக 226 மில்லியன் டாலர் தொகையை வழங்கியுள்ளது. இது அந்த நிறுவனத்தின் ஊழியர்களின் சராசரி சம்பள அளவைவிட 800 மடங்கு அதிகம் ஆகும். சுந்தர் பிச்சைக்கு வழங்கிய இந்தத் தொகையில் தொகையில் 218 மில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவனத்தின் பங்குகளும் அடங்கும்.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் உலகளவில் வேலை ஆட்களைக் குறைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஊதிய ஏற்றத்தாழ்வு கவனத்துக்கு உரியதாக மாறியுள்ளது. கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் தனது உலகளாவிய பணியாளர்களில் சுமார் 6 சதவீதம் பேரை, அதாவது கிட்டத்தட்ட 12,000 பணியாளர்களை கடந்த ஜனவரி மாதம் வேலையில் இருந்து நீக்கியுள்ளது.
ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், மீண்டும் பணிநீக்க நடவடிக்கை தொடர்பாக தகவல் வெளியானதும் அதிர்ச்சி அடைந்த நூற்றுக்கணக்கான கூகுள் லண்டன் அலுவலக ஊழியர்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில் நிறுவனத்திலிருந்து தாமாகவே வெளியேறியுள்ளனர்.
இதேபோல மார்ச் மாதத்திலும் பல ஊழியர்கள் ஒரே நேரத்தில் விலகியது சர்ச்சைக்குள்ளானது. சூரிச் கூகுள் அலுவலகத்தில் பணிநீக்கம் செய்யப்படுவது தொடர்பான தகவலின் எதிரொலியாகவே 200 பேருக்கு மேல் வெளியேறினர்.
Breaking: மூணாறில் வேன் கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலி; 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.