அட்டகாச சலுகையை அறிவித்தது ஜியோ..! முந்துங்கள்...இப்படி ஒரு சலுகை இனி கிடைக்காது..!

First Published Apr 30, 2018, 6:33 PM IST
Highlights
dont miss this jio offer hurry up


ஜியோ எந்த அறிவிப்பை வெளியிட்டாலும் அது மக்களுக்கு நல்ல ஒரு வரப்பிரசாதமாக தான் இருக்கும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது  

இந்நிலையில், எந்த ஒரு பழைய டாங்கிள்களை வழங்கி புதிய ஜியோஃபை போர்டபிள் ஹாட்ஸ்பாட் பெறுவோருக்கு ரிலையன்ஸ் புதிய சலுகைகளை வழங்குகிறது.

அவ்வாறு புதிய டாங்கிள்களை வாங்கினால், புதிய வைபை ரவுட்டர் மற்றும் ரூ.2200 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

ஜியோஃபை எக்ஸ்சேஞ்ச் குறுகிய கால சலுகையை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?

ஜியோஃபை போர்டபிள் வைபை ரவுட்டரை ரூ.999 செலுத்தி வாங்க வேண்டும்

ஜியோ பிரைம் ரூ.99 மற்றும் ரூ.198 அல்லது ரூ.299 செலுத்தி சிம் கார்டினை ஆக்டிவேட் செய்ய வேண்டும்

உங்களின் பழைய ஜியோ அல்லாத டாங்கிளை ஏதேனும் ஜியோஸ்டோர் அல்லது ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் வழங்க வேண்டும்

பழைய ஜியோ அல்லாத டாங்கிள் அல்லது மோடெமின் சீரியல் நம்பரை வழங்கி, புதிய ஜியோஃபை MSISDN நம்பரை பெற வேண்டும்

உங்களுக்கான கேஷ்பேக் உடனடியாக மைஜியோ கணக்கில் சேர்க்கப்பட்டு விடும்

ரூ.2200 மதிப்புடைய கேஷ்பேக் ரூ.50 மதிப்புடைய மொத்தம் 44 வவுச்சர்களாக வழங்கப்படும், இவற்றை ரூ.198 மற்றும் ரூ.299 ரீசார்ஜ் செய்ய மட்டும் பயன்படுத்தலாம்.

ஜியோவின் இந்த சலுகையால், மற்ற தொலைதொடர்பு  நிருவனங்கள் வழங்கி வரும்  இன்ட்ர்நெட் சேவையும் பாதிக்கப் படும் அதாவது, மற்ற நிருவனங்கள் நஷ்டத்தை அடையும்.

ஏற்கனவே ஜியோவுடன் போட்டி போடா முடியாமல் ஏர்செல் நிறுவனம் திவாலானது.

இந்நிலையில், ஜியோ புது டாங்கில் வழங்கி அதன் மூலம், நல்ல சேவையை கொடுக்கும் சமயத்தில் இந்தியா முழுக்க ஜியோ அசைக்க முடியாத ஒரு சக்தியாக  மாறிவிடும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது.

click me!