சாவு எப்படியெல்லாம் வருது பார்த்தீங்களா? தற்கொலைக்கு முயன்ற இளைஞர்! 3 பேர் உடல் கருகி பலி! நடந்தது என்ன?

By vinoth kumarFirst Published Jul 16, 2024, 11:01 AM IST
Highlights

தேனி மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் 7 பேர் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கொத்துக்கவுண்டன் புதூர் பகுதியில் வீடு வாடகை எடுத்து தங்கி வந்துள்ளனர். அழகுராஜா, முத்துக்குமார் ஆகியோர் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசனிலும், மற்றவர்கள் தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றி வந்துள்ளனர்.

கோவை அருகே ஓட்டுநர்கள் தங்கியிருந்த அறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் 7 பேர் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கொத்துக்கவுண்டன் புதூர் பகுதியில் வீடு வாடகை எடுத்து தங்கி வந்துள்ளனர். அழகுராஜா, முத்துக்குமார் ஆகியோர் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசனிலும், மற்றவர்கள் தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றி வந்துள்ளனர். இவர்களில் அழகுராஜா என்பவர் விபத்து ஏற்படுத்திய வழக்கில் சிறையிலிருந்து வந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.  

Latest Videos

இதையும் படிங்க: TANGEDCO: தமிழகத்தில் மின் கட்டண உயர்வு.. என்ன காரணம்? மின் வாரியம் கொடுத்த பரபரப்பு விளக்கம்!

இதனால் மதுபோதையில் இருந்த அவர் நண்பர்கள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது வீட்டில் இருந்த பெட்ரோல் கேனுடன் சமையலறையில் தீக்குளித்துள்ளார். அப்போது  பெட்ரோல் கேனை தூக்கி வீசியுள்ளார். இதில், அவருடன் அறையில் தங்கியிருந்த நண்பர்கள் மீதும் தீப்பற்றியுள்ளது. 

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் படுகொலை! தலைநகரை அலறவிட்ட ரவுடிளை அலறவிடும் சென்னை கமிஷனர்! 77 பேரை தட்டித்தூக்கிய போலீஸ்!

இதில், அழகுராஜா உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் 3 பேருக்கு 90 சதவீத தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவருக்கு 20 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

click me!