திருவண்ணாமலையில் டெங்கு காய்ச்சலுக்கு இளைஞர் பலி…

First Published Oct 20, 2017, 8:54 AM IST
Highlights
Youth hunt for dengue fever in Tiruvannamalai


திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு, செங்கல்வராயன் தெருவைச் சேர்ந்தவர் சிவசங்கர் மகன் எஸ்.வைத்தியநாதன் 25).

இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் தண்டராம்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.

அங்கு அவருக்கு மேற்கொண்ட சோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது.

பின்னர், அதன் பின்னர் தனியார் மருத்துவமனையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லும்படி தனியாய் மருத்துவமனை மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதன்படி அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

click me!