மெரினாவில் கூட்டம் கலையுமா ? கலையாதா....?

Asianet News Tamil  
Published : Jan 21, 2017, 07:48 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
மெரினாவில்  கூட்டம்  கலையுமா ? கலையாதா....?

சுருக்கம்

 

      ஒட்டுமொத்த தமிழக  இளைஞர்களுமே  ஒன்று திரண்டுள்ளனர் மெரினாவில்.  ராப்பகலாக, தொடர்ந்து இன்றோடு ஐந்தாவது   நாளாக , ஜல்லிகட்டுக்கு  தங்கள்  ஆதரவை  தெரிவித்து வரும்  இளைஞர்கள் பெண்கள், மாணவர்கள் அனைவரும் ,  மெரினாவிலேயே தங்கி , உயிர் போனாலும் பரவாயில்லை என ,  முழு  ஆதரவை வெளிப்படுத்தி  வருகிறார்கள்   இளைஞர்கள்

இந்நிலையில்,  தற்போது,  ஜல்லிக்கட்டு நடத்த   தமிழக  அரசு,  உள்துறை  அமைச்சகத்தின்  ஒப்புதலுடன்  அவசர  சட்டத்தை   கொண்டு வந்துள்ளது.

ஆனால்,  போரட்டக்காரர்களோ  எங்களுக்கு  அவசர  சட்டம் வேண்டாம் , ஜல்லிக்கட்டுக்காக  நிரந்தர தீர்வு மட்டுமே   வேண்டும்,  பீட்டாவை  முற்றிலும்  தடை செய்ய  வேண்டும்  என, உறுதியாக  உள்ளனர் .

இதனால், ஐந்தாவது  நாளாக  தொடந்து  போராடி  வரும்  இளைஞர்கள் , தங்களுடைய  போராட்டத்தை  கைவிட போவதாக  இல்லை என்றும்,  ஜல்லிக்கட்டுகான  நிரந்தர  தீர்வு  , அதாவது  உச்சநீதிமன்ற   தீர்ப்பு  தான்  நிரந்தர தீர்வு என்றால்,  அந்த  தீர்வு வரும் வரை  , தங்களது  போராட்டம்  தொடர்ந்து  நீடிக்கும்  என  தெரிவிக்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் - செல்லூர் ராஜு பேட்டி
ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!