25-ம் தேதிக்கு பின் தமிழகத்தில் மழை..! மழை வருது மழை வருது குடை கொண்டு வா...!

Asianet News Tamil  
Published : Feb 21, 2018, 06:57 PM ISTUpdated : Sep 19, 2018, 01:59 AM IST
 25-ம் தேதிக்கு பின் தமிழகத்தில் மழை..! மழை வருது மழை வருது குடை கொண்டு வா...!

சுருக்கம்

we can expect the rain after 25 said pradep john

 25-ம் தேதிக்கு பின்  தமிழகத்தில் மழை..! வெதர்மேன் சொல்கிறார்..!

தமிழகத்தில் வரும் 25-ம் தேதிக்கு மேல் மிதமான  மழைக்கு வாய்ப்பு உள்ளது என வெதர்மேன் பிரதீப் ஜான்  தெரிவித்து உள்ளார்

தமிழ்நாடு வெதர்மேன் பதிவில் எழுதிவரும் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகம் மற்றும் சென்னையில் அடுத்த ஒரு வார காலத்துக்கு தற்போது இருப்பதுபோல் இயல்பான நிலையிலேயே வெப்பநிலை இருக்கும். அல்லது ஒரு டிகிரி செல்சியஸ் அளவு குறையலாம்.

தென் தமிழக்தில் குறிப்பாக நெல்லை மற்றும் கன்னியாகுமரி பகுதியில் வெப்பநிலை ஒரு டிகிரி முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இந்த காலநிலையை அனுபவியுங்கள், வெயில் அதிகமாக இருக்கும் என்று நினைக்கத் தேவையில்லை.

தென் தமிழகத்தைப் பொருத்தவரை வரும் 25-ம் தேதிக்கு பின் மிதமான மழை இருக்கும். பெரிய அளவிலான மழையை எதிர்பார்க்க முடியாது. ஆனால், இலங்கைக்கு நல்ல மழை இருக்கும்.

இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

எனவே இன்னும் இரண்டு நாட்களில் தமிழகத்தில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம்.

PREV
click me!

Recommended Stories

காங்கிரஸ் கூட்டணியில் இல்லாமல் திமுகவினால் 25 இடங்கல் கூட வெற்றிபெற முடியாது ! நிர்மல் குமார் பேட்டி
எவ்வளவு சொல்லியும் கேட்காத அக்கா! ஆத்திரத்தில் தம்பி! அலறிய சுமித்ரா! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்.!