பரபரப்பு.. ! தமிழகத்தையே உலுக்கிய விருதுநகர் பாலியல் வன்கொடுமை.. கைதானவருக்கு ஜாமீன்.. நீதிபதி உத்தரவு..

Published : Apr 08, 2022, 10:20 AM IST
பரபரப்பு.. ! தமிழகத்தையே உலுக்கிய விருதுநகர் பாலியல் வன்கொடுமை.. கைதானவருக்கு ஜாமீன்.. நீதிபதி உத்தரவு..

சுருக்கம்

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 சிறுவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.    

விருதுநகரில் 22 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுவர்கள் நால்வரும் ராமநாதபுரம் கூர்நோக்கு இல்லத்திலும், மற்ற 4 பேர் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 8 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 6 பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர். 

சிபிசிஐடி டிஎஸ்பி வினோதினி தலைமையிலான குழு விசாரணையில் இறங்கியது. முதலில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் 2 நாள்கள் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் கைதான 8 பேரின் வீடுகள் மற்றும் சம்பவ நடந்த இடங்களிலும் சோதனையை சிபிசிஐடி போலீசார் நடத்தினர். அதனையடுத்து, வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 பேரையும் போலீஸ் காவலில் விசாரிக்க திட்டமிட்டது.மேலும் கைது செய்யப்பட்டுள்ள 8 பேரின் வீடுகளில் நடத்தப்பட சோதனையில் கைப்பற்றப்பட்ட செல்போன், மெமரிகார்டு, லெப்டாப் ஆகியவை ஆய்வுக்கு அனுப்பட்டுள்ளது. 

பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.  சம்பவம் நடந்த மருந்து குடோனுக்கு நேரில் அழைத்து வந்து டிஎஸ்பி வினோதினி தலைமையில்  சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, 4 மாணவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 சிறுவர்களுக்கு சிறார் நிதி குழும நீதிபதி மருதுபாண்டியன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக ஹரிஹரன் உள்ளிட்ட நால்வரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
கலைஞருக்கு பாரத ரத்னா விருது வேண்டும்.. மக்களவையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை