
சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய், தற்போதைய அரசியல் சூழலை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். தனது அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்திய அவர், "நாம நம்ம ஸ்டாண்ட்லேயே இருப்போம், அப்படியே இருப்போம்" என்று உறுதிபடத் தெரிவித்தார். மதம் கடந்த மனிதநேயமே தனது கொள்கை என்பதை "எம் மதமும் நம் மதம்" என்ற முழக்கத்தின் மூலம் வெளிப்படுத்திய விஜய், அரசியல் களத்தில் தான் ஒரு தனி சிங்கமாக நின்று எதிரிகளுக்குப் பதில் சொல்லத் தயாராக இருப்பதாகவும், தன்னை எதிர்க்கும் கூட்டத்திற்குத் தான் நிச்சயம் "தண்ணி காட்டிவிடுவேன்" என்றும் கர்ஜித்தார்.