பிரதமர் மோடியைச் சந்தித்து கேலோ இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த உதயநிதி ஸ்டாலின்!

By SG BalanFirst Published Jan 4, 2024, 8:34 PM IST
Highlights

டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைக்க அழைப்பு விடுத்தார்.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெல்லியில் பிரதமர் மோடியை வியாழக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார்.

ஜனவரி 19 முதல் 31 வரை தமிழகத்தில் நடைபெற உள்ள கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைக்க அழைப்பு விடுத்தார். அதற்கு பிரதமர் ஒப்புக்கொண்டதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Latest Videos

உதயநிதி ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்திப்பது இரண்டாவது முறை ஆகும். கடந்த ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் பிரதமரை சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். அப்போது அவர் விளையாட்டு தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தார். 

வியாழக்கிழமை பிரதமர் மோடியைச் சந்தித்த பின், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரையும் அமைச்சர் உதயநிதி சந்தித்துப் பேசினார். பிறகு செய்தியாளர்களின் பேசிய அவர், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினார்.

கத்தாரில் 8 இந்தியர்களின் கதி என்ன? 60 நாட்கள் கெடு இருப்பதாக வெளியுறவுத்துறை தகவல்

டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைக்க அழைப்பு விடுத்தார். pic.twitter.com/Gb4pj2VIyO

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

"ராகுல் காந்தி தனது பாதயாத்திரையை மணிப்பூரில் இருந்து விரைவில் தொடங்குவது பற்றிப் பேசினார். நாங்கள் பரஸ்பரம் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டோம்" எனவும் அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.

இதே நாளில் டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்திப்பு நடைபெற்றிருப்பது குறித்து கேட்டதற்கு, "ராகுல் காந்தி அதைப் பற்றியும் பேசினார். ஆனால், அதைப்பற்றி என்னால் இப்போது எதுவும் தெரிவிக்க முடியாது" எனக் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமருடனான தனது சந்திப்பின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். "இன்று டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து கேலோ இந்தியா திறப்பு விழாவிற்கு அவரை அழைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

டிராய் பெயரில் போலிச் செய்திகள்... விழிப்புணர்வு ஏற்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

"தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளபடி, தமிழகத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விரிவான நிவாரணம், மறுசீரமைப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்தார்" என்றும் அமைச்சர் கூறினார். 

தமிழகத்தின் பொது முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்தும், குறிப்பாக தமிழகத்தில் விளையாட்டுத்துறையின் பன்முக வளர்ச்சி குறித்தும் பிரதமருடன் விவாதித்ததாக உதயநிதி கூறினார். இந்த சந்திப்பின்போது, ​​2023ஆம் ஆண்டு தமிழகத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்த சிஎம் டிராபி கேம்ஸ் மற்றும் தமிழ்நாடு நடத்திய ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் குறித்த புத்தகம் பிரதமருக்கு பரிசாக வழங்கப்பட்டது.

ஒரே நாளில் 150 முறை ஜப்பானை உலுக்கிய தொடர் நிலநடுக்கங்கள்... விஞ்ஞானிகள் கூறும் காரணம் என்ன?

click me!