
நடிகை திரிஷா மற்றும் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தொடர்பாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது எதிர்க்கட்சித் தலைவராகவோ பதவிகளை வகிக்க அடிப்படைத் தகுதியற்றவர் என்றும், பொதுவாழ்வில் நீடிக்க முடியாதவர் என்றும் அவர் குற்றம்சாட்டினார். பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுபவர்களுக்கு மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் இடமில்லை என்று தெரிவித்த அமைச்சர், இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்