காவிரி நீர் உரிமை, விவசாயிகள் பிரச்சனைகள் மற்றும் தமிழகத்தின் நதிநீர் உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி, தஞ்சாவூரில் திமுக சார்பில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தமிழகத்தின் காவிரி உரிமைகளை மீட்டெடுக்கக் கோரியும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டன. இதில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.