கேப்டன் விஜயகாந்தின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்... உதயநிதி இரங்கல்

By Ajmal KhanFirst Published Dec 28, 2023, 1:24 PM IST
Highlights

சிறந்த மனிதநேயர் - துணிச்சலுக்கு சொந்தக்காரர் - தமிழ்த்திரையுலகின் தவிர்க்கவியலா நாயகராக திகழ்ந்தவர் - முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது அவருக்கும் , அவர் மீது கலைஞர் அவர்களுக்கும் இருந்த பேரன்பை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது என உதயநிதி தெரிவித்துள்ளார். 
 

விஜயகாந்த் மறைவு- தலைவர்கள் இரங்கல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பாதிப்பால் இன்று காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் தமிழக அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.  சிறந்த மனிதநேயர் - துணிச்சலுக்கு சொந்தக்காரர் - தமிழ்த்திரையுலகின் தவிர்க்கவியலா நாயகராக திகழ்ந்தவர் - முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது அவருக்கும் , அவர் மீது கலைஞர் அவர்களுக்கும் இருந்த பேரன்பை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. 

Latest Videos

புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அன்புக்குரிய நண்பர். நடிகர் சங்கத் தலைவராகவும் - எதிர்க்கட்சித் தலைவராகவும் திறம்பட செயல்பட்ட கேப்டன் அவர்களின் இழப்பு, தமிழ்த்திரையுலகிற்கும் - அரசியல் உலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மரணத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் - தே.மு.தி.க தொண்டர்கள் - நண்பர்கள் - திரையுலகினருக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என உதயநிதி தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

Breaking News : விஜயகாந்தின் உடல் நாளை மாலை தேமுதிக அலுவலகத்தில் அடக்கம்- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

click me!