
திராவிட இயக்கத்தின் தந்தை மற்றும் சமூக சீர்திருத்தவாதியான தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமியின் 147-வது பிறந்தநாள் 'சமூக நீதி நாளாக' தமிழகம் முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு அரசியல் தலைவர்கள், அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். ஜாதி ஒழிப்பு, பெண் உரிமை, மூடநம்பிக்கை எதிர்ப்பு மற்றும் பகுத்தறிவுச் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்த பெரியாரின் தொண்டினை நினைவுகூரும் வகையில் பல்வேறு கருத்தரங்குகளும் விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.