எங்க பூமி எங்களுக்கு கிடைச்சிருக்கு...! நல்ல காத்து கிடைச்சிருக்கு...! தூத்துக்குடி மக்கள் நெகிழ்ச்சி

Asianet News Tamil  
Published : May 28, 2018, 06:58 PM ISTUpdated : Sep 19, 2018, 02:26 AM IST
எங்க பூமி எங்களுக்கு கிடைச்சிருக்கு...! நல்ல காத்து கிடைச்சிருக்கு...! தூத்துக்குடி மக்கள் நெகிழ்ச்சி

சுருக்கம்

Tuticorin people are happy

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி உயிர் நீத்தவர்களுக்கு தூத்துக்குடி மக்கள் நன்றி கூறினர். மேலும் எங்கள் சந்ததிகள் வாழ வழிவகுத்த அவர்களுக்கு என்றென்றும் நன்றி கடன்பட்டவர்கள் என்றும் அவர்கள் கண்ணீர்மல்க கூறினர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டதைத் தொடர்ந்து ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஆட்சியர் சந்துப் நந்தூரி முன்னிலையில் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்கனவே மின்சாரம், குடிநீர் துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது குறித்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும்போது; 

20 வருஷமா நாங்க போராடினோம். எங்கள் போராட்டத்துக்கு வெற்றி கிடைச்சிருக்கு. ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால், சுத்தமான காற்று எங்களுக்கு கிடைக்கும். எங்க பூமி எங்களுக்கு கிடைச்சிருக்கு. 

100-வது நாள் பேரணி குறித்து ஏற்கனவே நாங்கள் அறிக்கை விட்டிருந்தோம். அப்போது 144 தடை உத்தரவு போடாமல் இருந்திருந்தால், இந்த உயிர்பலி நடந்திருக்காது. 

உயிரை இழந்த வேதனையோடு ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம். ஆலை மூடப்பட்டதற்கு நன்றி. ஆலை மூடப்பட்டது நிரந்தரமாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்னர். 

நாங்கள் வன்முறையாளர்கள் கிடையாது. காந்தி தேசத்தைச் சேர்ந்தவர்கள்தான். எத்தனையோ பேரின் தியாகத்தால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. அந்த வகையில் காற்று சுவாசத்துக்காக நாங்கள் போராடி வெற்றி பெற்றுள்ளோம். எங்கள் சந்ததிகள் வாழ வழி வகுத்த உயிர்நீத்த போராளிகளுக்கு நாங்கள் எப்போதும் நன்றி கூறுகிறோம் என்று அப்பகுதி மக்கள் உணர்ச்சிப்பெருக்கோடு கூறி வருகின்றனர். இந்த முடிவை எடுத்த தமிழக அரசுக்கும், அதனை செயல்படுத்திய ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கும் அப்பகுதி மக்கள் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

டெய்லி எதுக்கு இப்படி குடிச்சிட்டு வரீங்க கேட்ட காதல் மனைவி.. ஃபுல் மப்பில் பிரவீன்குமார் செய்த அதிர்ச்சி
தமிழகத்தில் மழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்.. வானிலை மையம் முக்கிய அப்டேட்