அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி... கழிவறையில் விஷ ஊசி போட்டு பயிற்சி டாக்டர் தற்கொலை!

By vinoth kumarFirst Published Dec 23, 2018, 11:46 AM IST
Highlights

திருச்சி அரசு மருத்துவமனையில், விஷ ஊசி போட்டு கழிவறையில் பயிற்சி டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனையில், விஷ ஊசி போட்டு கழிவறையில் பயிற்சி டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் விக்னேஷ் நகரை சேர்ந்தவர் மோகன். ஓய்வு பெற்ற பேராசிரியர். இவரது மகன் சுதர்சன் (வயது 24). இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வருகிறார்.   நேற்று முன்தினம் இரவு சுதர்சன் எம்.எஸ்.1 வார்டில் இரவு பணியில் இருந்த சுதர்சன் கழிவறைக்கு சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. நள்ளிரவு நேரம் என்பதால் டாக்டரை யாரும் தேடவில்லை.  

இந்நிலையில், நேற்று காலை 9.30 மணிக்கு துப்புரவு பணியாளர்கள் அந்த வார்டுகளை சுத்தம் செய்தனர். அப்போது, 3ம் எண் கழிவறையில் சுதர்சன் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். அவரது சத்தம் கேட்டு நர்சுகள், டாக்டர்கள் வந்து அவரை பரிசோதித்தபோது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. கழிவறை பேசினுக்கள் ஒரு சிரிஞ்ச் கிடந்தது. அருகில், கேட்டமைன் என்ற போதை பொருள் பாட்டிலும் கிடந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுதர்சனின் பெற்றோரும் வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சுதர்சனுக்கு அடிக்கடி போதை ஊசி மற்றும் மருந்து எடுத்துக்கொள்ளும் பழக்கம் இருந்துள்ளது. இதையறிந்த பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால்,  மன உளைச்சல் அடைந்த அவர், கேட்டமைன் என்ற போதை பொருளை அதிகளவில் செலுத்தி தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!