திருச்சி செல்லும் பயணிகள் இரயில் நாளை இரத்து…

 
Published : Nov 12, 2016, 03:00 AM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
திருச்சி செல்லும் பயணிகள் இரயில் நாளை இரத்து…

சுருக்கம்

இரயில்வே சுரங்க பாதை அமைக்கும் பணி நடைபெற இருப்பதால் திருச்சி செல்லும் பயணிகள் இரயில் நாளை இரத்து செய்யப்படுகிறது.

திருச்சி அருகே குமாரமங்கலம் – கீரனூர் இடையே இரயில்வே சுரங்க பாதை அமைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற இருக்கிறது.

இதையொட்டி காரைக்குடி – திருச்சி பயணிகள் இரயில், திருச்சி – மானாமதுரை பயணிகள் இரயில், மானாமதுரை – திருச்சி பயணிகள் இரயில் நாளை ஒரு நாள் இரத்து செய்யப்படுகிறது.

காரைக்குடி – திருச்சி பயணிகள் இரயில் காரைக்குடியில் இருந்து தாமதமாக மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு இரவு 8.10 மணிக்கு வந்து சேரும்.

புவனேஸ்வர் – இராமேசுவரம் எக்ஸ்பிரஸ் இரயில் திருச்சியில் நிறுத்தி வைக்கப்பட்டு இயக்கப்படும்.

திருச்சி – காரைக்குடி பயணிகள் இரயில் திருச்சியில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 7.20 மணி அளவில் புறப்படும்” என்று திருச்சி கோட்ட இரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!