திருச்சி செல்லும் பயணிகள் இரயில் நாளை இரத்து…

Asianet News Tamil  
Published : Nov 12, 2016, 03:00 AM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
திருச்சி செல்லும் பயணிகள் இரயில் நாளை இரத்து…

சுருக்கம்

இரயில்வே சுரங்க பாதை அமைக்கும் பணி நடைபெற இருப்பதால் திருச்சி செல்லும் பயணிகள் இரயில் நாளை இரத்து செய்யப்படுகிறது.

திருச்சி அருகே குமாரமங்கலம் – கீரனூர் இடையே இரயில்வே சுரங்க பாதை அமைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற இருக்கிறது.

இதையொட்டி காரைக்குடி – திருச்சி பயணிகள் இரயில், திருச்சி – மானாமதுரை பயணிகள் இரயில், மானாமதுரை – திருச்சி பயணிகள் இரயில் நாளை ஒரு நாள் இரத்து செய்யப்படுகிறது.

காரைக்குடி – திருச்சி பயணிகள் இரயில் காரைக்குடியில் இருந்து தாமதமாக மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு இரவு 8.10 மணிக்கு வந்து சேரும்.

புவனேஸ்வர் – இராமேசுவரம் எக்ஸ்பிரஸ் இரயில் திருச்சியில் நிறுத்தி வைக்கப்பட்டு இயக்கப்படும்.

திருச்சி – காரைக்குடி பயணிகள் இரயில் திருச்சியில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 7.20 மணி அளவில் புறப்படும்” என்று திருச்சி கோட்ட இரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.

PREV
click me!

Recommended Stories

Vijay: நீட் விலக்கு முதல் கல்வி நிதி வரை.. பிரதமர் மோடி முன்பு அதிரடி காட்டிய விஜய்.. வியந்து பார்த்த முதல்வர்கள்!
TN Rain Alert: சென்னை டூ கன்னியாகுமரி.. அடிச்சு துவம்சம் செய்யப்போகும் கனமழை.. உங்க மாவட்டம் இருக்கா?