அடுத்த 2 நாட்களுக்கு கனமழை..! எந்தெந்த மாவட்டங்களில் வெளுந்து வாங்கப் போகிறது.. வானிலை அப்டேட்..

Published : May 04, 2022, 02:35 PM IST
அடுத்த 2 நாட்களுக்கு கனமழை..! எந்தெந்த மாவட்டங்களில் வெளுந்து வாங்கப் போகிறது.. வானிலை அப்டேட்..

சுருக்கம்

தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர்‌, சேலம்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி ,தர்மபுரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளையும் நாளை மறுநாளும் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்பசலனம்‌ காரணமாக,

04.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. மேலும்‌, இடி, மின்னல்‌ சமயத்தில்‌ தரை காற்று மணிக்கு 30 முதல்‌ 40 கிலோ மீட்டர்‌ வேகத்தில் வீசக்கூடும்‌.

05.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும்‌ சேலம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

06.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, கரூர்‌, நாமக்கல்‌, திருச்சி, சேலம்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும்‌ தர்மபுரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

07.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

08.05.2022: மேற்கு தொடர்ச்சி மலை மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌ (ஈரோடு, கரூர்‌, மதுரை), கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌ (கடலூர்‌, அரியலூர்‌, திருச்சுராப்பள்ளி, புதுக்கோட்டை) மற்றும்‌ காரைக்கால்‌ பகுஇகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

அதிகபட்ச வெப்பநிலை:

தமிழகத்தில்‌ அடுத்த மூன்று நாட்களுக்கு ஒரிரு இடங்களில்‌ அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்‌சியஸ்‌ அதிகமாக இருக்கக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ சில இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கக்கூடும்‌.

இன்று காலை (04.05.2022) தெற்கு அந்தமான்‌ மற்றும்‌ அதனை ஓட்டியுள்ள பகுதிகளில்‌ ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன்‌ காரணமாக, இப்பகுதிகளில்‌ 06-ம்‌ தேதி ஓர்‌ காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்‌. இது வடமேற்கு திசையில்‌ நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில்‌ காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்‌. இதன்‌ காரணமாக,

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

04.05.2022. 05.05.2022: தெற்கு அந்தமான்‌ கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்கிழக்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

06.05.2022: அந்தமான்‌ கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்கிழக்கு வங்க கடல்‌ மற்றும்‌ மத்திய ஒழக்கு வங்க கடல்‌ பகுஇகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 5௦ கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

07.05.2022: தென்கிழக்கு வங்க கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய அந்தமான்‌ கடல்‌, மத்திய கிழக்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

08.05.2022: தென்கிழக்கு வங்க கடல்‌, மத்திய கிழக்கு வங்க கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 55 முதல்‌ 65 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 75 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாளில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மது-வால் லட்சக்கணக்கான பெண்கள் கண்ணீர் விட்டு கதறுறாங்க.. மகளிர் முன்னேறிவிட்டதாக ஸ்டாலின் கூறுவது வெட்கக்கேடு!
பெருந்துறையில் இடம் மாறும் விஜய் பிரச்சாரம்..! அடேங்கப்பா உள்குத்து அரசியல்..! புகுந்து விளையாடும் திமுக- அதிமுக புள்ளிகள்..!