Tamilnadu Rains : தமிழகத்தை புரட்டி போடும் கனமழை.. எந்தெந்த இடங்கள் தெரியுமா ? வெளியான புது தகவல் !!

Published : Mar 05, 2022, 06:16 AM IST
Tamilnadu Rains : தமிழகத்தை புரட்டி போடும் கனமழை.. எந்தெந்த இடங்கள் தெரியுமா ? வெளியான புது தகவல் !!

சுருக்கம்

வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.

அது அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், இது அடுத்த 48 மணிநேரத்தில் இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டின் டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. மேலும்,  தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில், தமிழக கடற்கரையோரம், மன்னார் வளைகுடா மற்றும் குமரி பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 55-65 கிமீ வேகத்தில் மணிக்கு 75 கிமீ வேகத்தில் வீசும்.

மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் ஆழ்கடல் பகுதியில் உள்ள மீனவர்கள் உடனே கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.7ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!