தமிழகத்தில் பரவிய வெஸ்ட் நைல் வைரஸ்.? தமிழகத்துக்கு ஆபத்தா ? உண்மையை போட்டு உடைத்த அமைச்சர் மா.சு

By Raghupati RFirst Published May 31, 2022, 12:38 PM IST
Highlights

Ma Subramanian : கோவை, மதுரை, திருச்சி விமானநிலையங்களில் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மக்களை தேடி செல்லும் மருத்துவ பணியாளர்களும் வீடு வீடாக செல்லும் போது குரங்கு அம்மை பாதிப்பு குறித்து கண்காணித்து வருகின்றனர். 

கோவை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மன அழுத்தத்திற்கான அதிதீவிர சிகிச்சைப்பிரிவை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள புதிய இருதய தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் குழந்தைகளுக்கான அதி தீவிர சிகிச்சை பிரிவு உட்பட 110 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஜெய்கா கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 32 படுக்கைகளுடன் கூடிய அதிதீவிர சிகிச்சை பிரிவு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. மேலும், தற்போது மருத்துவமனை வளாகத்தில் ஜப்பான் நிதி திட்டத்தில் ரூ.110 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகள் இந்த ஆண்டிற்குள் முடிக்கப்படும்.கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது போன்ற வைரஸ் பாதிப்புகள் கோவை உள்பட தமிழகத்தில் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

மேலும் கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் 13 சோதனைச்சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. தமிழகத்தில் குரங்கு அம்மை தாக்கம் இல்லை. ஆனாலும் கோவை, மதுரை, திருச்சி விமானநிலையங்களில் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மக்களை தேடி செல்லும் மருத்துவ பணியாளர்களும் வீடு வீடாக செல்லும் போது குரங்கு அம்மை பாதிப்பு குறித்து கண்காணித்து வருகின்றனர். யாரும் பயப்பட தேவையில்லை' என்று கூறினார்.

இதையும் படிங்க : அவர் சேகர்பாபு இல்ல "ஸ்நேக் பாபு. !" அமைச்சர் சேகர்பாபுவை பங்கம் செய்த எச்.ராஜா !

இதையும் படிங்க : கணவன் கண்முன்னே கள்ளகாதலனுடன் மனைவி உல்லாசம்.. வாழைத்தோப்பில் கொன்று புதைத்த சம்பவம் !

click me!