கொடுத்த வாக்கை செய்ய தவறிய தமிழக அரசு.. போராட்டத்தில் குதித்த சோமனூர் உறவினர்கள்...! அதிர்ச்சியில் மருத்துவமனை நிர்வாகம்..

 
Published : Sep 23, 2017, 04:03 PM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
 கொடுத்த வாக்கை செய்ய தவறிய தமிழக அரசு.. போராட்டத்தில் குதித்த சோமனூர் உறவினர்கள்...! அதிர்ச்சியில் மருத்துவமனை நிர்வாகம்..

சுருக்கம்

They said that the government will not give up the fight until the appropriate action is taken.

கடந்த 5 ஆம் தேதி சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் பேர்ந்துக்காக காத்திருந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர். 
இதுகுறித்து ஐஏஎஸ் அதிகாரி சுகன் தீப் சிங் பேடி விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இதில் உயிரிழந்தோருக்கு தலா ரூ. 4 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். 
மேலும் காயமடைந்தவர்களின் முழு செலவும் அரசே ஏற்கும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 
இந்நிலையில், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் தனியார் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
காரணம், காயமடைந்தவர்களின் முழு செலவும் அரசே ஏற்கும் எனஅதிகாரிகள் கூறியதாகவும், ஆனால் மருத்துவமனை நிர்வாகம் தங்களிடம் பணம் கேட்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். 
அரசு தகுந்த நடவடிக்கை எடுக்காதவரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

திமுக எம்.எல்.ஏ கார் மோதி ஒருவர் பலி..! ஒரத்தநாட்டில் பரபரப்பு..! என்ன நடந்தது?
அடேங்கப்பா... திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல் காணிக்கை இத்தனை கோடியா?