மீண்டும் கைதான சேகர்ரெட்டிக்கு ஜாமீன் இல்லை பிடிஇறுகுவதால் மேலும் சிக்கல்

 
Published : Apr 26, 2017, 05:56 PM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
மீண்டும் கைதான சேகர்ரெட்டிக்கு ஜாமீன் இல்லை பிடிஇறுகுவதால் மேலும் சிக்கல்

சுருக்கம்

there is no bail for sekhar reddy

சேகர்ரெட்டி, சீனிவாசலு, பிரோம்குமார் ஆகியோரது நீதிமன்றக் காவல் மே 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

சட்டவிரோதமாக 34 கோடிபுதிய ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைத்திருந்த வழக்கில் ஓ.பன்னீர் செல்வதற்கு நெருக்கமாக இருந்த சேகர் ரெட்டி கடந்தாண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சேகர் ரெட்டியின் சகோதரரான சீனிவேலு மற்றும் பிரேம் குமார் ஆகியோரும் கைதாகினர். 

கைது செய்யப்பட்டு 80 நாட்களை கடந்தும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறி அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் வெளியே வந்த மூன்றே தினங்களில் சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டார்.

இந்தச் சூழலில் ஜாமீனில் விடுவிக்கும்படி சேகர்ரெட்டி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டது. 

இதற்கிடையே சேகர் ரெட்டியின் நீதிமன்றக் காவலை மே 10 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று பேரிடமும் 5 நாட்கள் விசாரணை நடத்த அமலாக்கத்துறையினர் முடிவு செய்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
Tamil News Live today 21 December 2025: அமெரிக்கா போனா திரும்ப முடியாதா.? கூகுள்–ஆப்பிள் எச்சரிக்கை.. அதிர்ச்சி செய்தி