தொடர் மழையால் மதுராந்தகம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி…

 
Published : Nov 03, 2017, 07:03 AM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
தொடர் மழையால் மதுராந்தகம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி…

சுருக்கம்

The water level of the lake of Maduranthagam rises by rain Farmers happiness ...

காஞ்சிபுரம்

தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழை காரணமாக மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள், மக்கள் என அனைவரும் மகழ்ச்சி அடைந்துள்ளனர். 

காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய ஏரியாக விளங்குவது மதுராந்தகம் ஏரி. இதன் நீர்மட்ட உயரம் 21.5 அடியாகும்.

தற்போது தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழையால் மதுராந்தகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளநீர் வரத் தொடங்கி உள்ளது. நீர்வரத்து கால்வாய்களின் மூலம் வெள்ளநீர் மதுராந்தகம் ஏரிக்கு வந்தடைகிறது.

அதனால் இங்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது. தற்போது, நீர்வரத்து உயர்ந்துள்ளதால் நேற்றைய நிலவரப்படி இதன் நீர்மட்டம் 18 அடியாக நிரம்பியுள்ளது. இதனால், இப்பகுதி விவசாயிகள் மற்றும் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த ஏரியின் நீர்பாசனக் கால்வாய் மூலம் 20 கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்து 413 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது..
 

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு