ஒப்பந்தத்தை மீறியது இலங்கை அரசு – அதிமுக எம்.பி தம்பிதுரை பிரதமர் அலுவலகத்தில் மனு

Asianet News Tamil  
Published : Mar 07, 2017, 06:53 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
ஒப்பந்தத்தை மீறியது இலங்கை அரசு – அதிமுக எம்.பி தம்பிதுரை பிரதமர் அலுவலகத்தில் மனு

சுருக்கம்

The Sri Lankan government has violated the agreement - AIADMK MP tampiturai petition the Prime Ministers office ..

ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் ஒப்பந்தத்தை மீறியது இலங்கை அரசு எனவும் தமிழக மீனவர்கள் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும் அதிமுக எம்.பிக்கள் பிரதமர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமட மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். இரவு 8 மணியளவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகள் மீது திடீர் துப்பாக்கிசூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கி சூட்டில் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து தங்கச்சிடமட மீனவர்கள் இறந்தவரின் உடலை வாங்க மறுத்து மீனவர்களின் பிரச்சனைக்கு நீதி கிடைக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும், பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கும்போது இலங்கை கடற்படையின் இந்த அராஜக போக்கை சகித்து கொள்ள முடியாது என பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார்.

பின்னர், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், மணிகண்டன் ஆகியோர் இறந்தவரின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசிய போது, கச்சத்தீவை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உங்களுடன் சேர்ந்து நாங்களும் இதில் உறுதியாக உள்ளோம். விரைவில் நல்ல முடிவுகள் வரும் என தெரிவித்தார்.

இந்நிலையில், தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக எம்.பிக்கள் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு பிரதமரின் முதன்மை செயலாளரை சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை பேசியதாவது.:

இந்தய அரசு தலையிட்டு தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தவேண்டும் எனவும், தமிழக மீனவர்களின் நலன் காக்கப்பட வேண்டும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் தமிழக மீனவர்களை சுட்டுகொள்ளக்கூடாது என ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்புகொள்ளபட்டது.

ஆனால் ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசு தமிழக மீனவரை சுட்டுக்கொன்றுள்ளதாக சுட்டி காட்டப்பட்டுள்ளது.   

இந்திய கடல் எல்லையில் தான் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தம்பிதுறை தெரிவித்தார்.

 

 

PREV
click me!

Recommended Stories

சொந்த கட்சி நிர்வாகியின் கார்கள் சல்லி சல்லியாக உடைப்பு! பாஜக முக்கிய நிர்வாகியின் பதவி பறிப்பு! வெளியான அதிர்ச்சி காரணம்?
உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்காகத்தான்.. மேடையிலேயே கண் கலங்கிய செங்கோட்டையன்..!