தந்தையை சுட்டுக் கொன்ற மகன்... பரபரப்பு

 
Published : Jun 05, 2018, 05:41 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
தந்தையை சுட்டுக் கொன்ற மகன்... பரபரப்பு

சுருக்கம்

The son fired father

குடும்ப பிரச்சனை காரணமாக தந்தையை, துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தேனியில் நடந்துள்ளது.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் விக்னேஷ்வர். இவர் ஆயுதப்படை காவல் பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.

தந்தை செல்வராஜுக்கும், மகன் விக்னேஷ்வருக்கும் குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் இன்றும் பிரச்சனை எழுந்தது. 

அப்போது ஆத்திரமடைந்த விக்னேஷ்வர், தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, தந்தை செல்வராஜை சுட்டுக் கொன்றுள்ளார். துப்பாக்கிசூடு சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ஆயுதப்படை காவலர் விக்னேஷ்வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

சாலையில் சென்ற பெண் மீது மோதி! அடுத்த நொடியே கவிழ்ந்த ஆட்டோ! பயணிகள் நிலை என்ன? பதற வைக்கும் வீடியோ!
நடிகர் விஜய்யை விட அரசியல்வாதி விஜய் மிகவும் பவர்புல்லானவர்.. அருண்ராஜ் எச்சரிக்கை..!