ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை இவ்வளவா.!!! ஒரே நாளில் கிடு கிடுவென உயர்வு

Published : Sep 30, 2025, 09:57 AM IST
jasmine

சுருக்கம்

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பூக்கள் சந்தையில் பூக்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ 800 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ, தற்போது 1700 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 

Ayudha Pooja flower price hike : ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பூக்கள் சந்தையில் பூக்கள் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மலர் சந்தைக்கு சென்னை மட்டுமில்லாமல் அருகாமையில் இருக்கக்கூடிய காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான ஆந்திரா கர்நாடகாவில் இருந்து வந்தும் வியாபாரிகள் பூ வாங்கி செல்வது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் நாளை ஆயுத பூஜை என்பதால் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ 700 முதல் 800-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ தற்பொழுது 1200 முதல் 1700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல மற்ற பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.

பூக்களின் விலை உயர்வு

சாமந்தி 130 முதல் 200, முல்லை 800 முதல் 1200,

சம்பங்கி ரூ.300 முதல் ரூ.350 வரை,

கனகாம்பரம் ரூ.1000

செவ்வந்தி ரூ.40 முதல் 400 , வெள்ளை செவ்வந்தி ரூ.170,

செண்டு மல்லி ரூ.100, வாடாமல்லி ரூ.100, கோழிக்கொண்டை ரூ.50 முதல் 80, சாக்லேட் ரோஜா 340, பன்னீர் ரோஜா ரூ.140 முதல் 200, மருகு ரூ.20, மரிக்கொழுந்து ரூ.30, துளசி ரூ.30 என விற்பனையாகிறது.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்..! அடுத்தடுத்து மூத்த தலைவர்கள் ஐக்கியம்! விஜய் குஷி!
இந்து கோயிலை இடிக்க தீர்ப்பு கொடுக்க கோர்ட் வேண்டும்..! தீபம் ஏற்றச்சொன்னால் கோர்ட் வேண்டாமோ? அண்ணாமலை ஆவேசம்..!