தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
இன்று உள் மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் கடலோர மாவட்டங்களில் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வருகிற 17 மற்றும் 18 ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். இருப்பினும் மீனவர்களுக்கான எந்த எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்படவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் சென்னை எம்ஆர்சி நகரில் ஒரு சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகியது குறிப்பிடத்தக்கது’ என்று கூறியுள்ளது வானிலை மையம்.