காஞ்சிபுரத்திற்கு புதிய ஆட்சியராக விருதுநகரைச் சேர்ந்தவர் நியமனம்…

 
Published : Mar 11, 2017, 10:24 AM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
காஞ்சிபுரத்திற்கு புதிய ஆட்சியராக விருதுநகரைச் சேர்ந்தவர் நியமனம்…

சுருக்கம்

The appointment of the new collector for kancipurattirku virutunakaraic belonged

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியராக விருதுநகரைச் சேர்ந்த பா.பொன்னையா பதவியேற்று உள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டையில் உதவி ஆட்சியராக பணிபுரிந்த பா.பொன்னையா காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு பதவியேற்றார்.

இவர் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகிலுள்ள சித்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தகப்பனார் பெயர் பால்சாமி, தாயார் மறைந்த ராஜம்மாள். இவருடைய மனைவி பெயர் சினேகலதா. இவர்களுக்கு சௌதாமினி என்ற மகளும் ராகுல் ஆதித்யா என்ற மகனும் உள்ளனர்.

1994–ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்–1 தேர்வு மூலம் கோட்ட வளர்ச்சி அலுவலராக ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றிய பா.பொன்னையா, தமிழ்நாடு முழுவதிலும் அந்தத் துறையில் பல மாவட்டங்களில் பணியாற்றி உள்ளார்.

கடந்த ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். இப்போது, காஞ்சிபுரத்தின் ஆட்சியராக பதவெயேற்றுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!