மாணவர்களின் போராட்டத்தால் மாற்றுப் பாதையில் ஓடும் இரயில்கள்…

Asianet News Tamil  
Published : Jan 20, 2017, 11:58 AM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
மாணவர்களின் போராட்டத்தால் மாற்றுப் பாதையில் ஓடும் இரயில்கள்…

சுருக்கம்

திருச்சி,

சல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் இரயில் மறியலில் ஈடுபடுவதால், பயணிகள் இரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. சில இரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

“சல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை தொடர்ந்து மதுரை - விழுப்புரம் பயணிகள் இரயில் இன்று (வெள்ளிக்கிழமை) மதுரை - திண்டுக்கல் இடையே இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் இராமேசுவரம் - மதுரை பயணிகள் ரெயில் மானாமதுரை - மதுரை இடையே இரத்து செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களின் போராட்டம் காரணமாக இராமேசுவரம் - திருப்பதி விரைவு இரயில், மதுரை, திண்டுக்கல் செல்லாமல் மாற்றுப்பாதையான விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாகவும், புதுச்சேரி - மங்களூரு விரைவு இரயில் விருத்தாசலம், திருச்சி, கரூர், ஈரோடு வழியாகவும், கன்னியாகுமரி - சென்னை விரைவு இரயில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாகவும், திருச்செந்தூர் - சென்னை விரைவு இரயில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாகவும் இயக்கப்பட்டன.

 

PREV
click me!

Recommended Stories

ஜோதிமணி மீது நடவடிக்கை பாயுமா? செல்வபெருந்தகையின் 'அடடே' விளக்கம்!
2026ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பெரும் மாற்றம் இருக்கும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி