ஊழியர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த பண்டிகை பரிசு… தீபாவளிக்கு மறுநாளும் விடுமுறை!!

By Narendran SFirst Published Nov 1, 2021, 4:59 PM IST
Highlights

தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் தீபாவளிக்கு வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 4 நாட்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளதால் ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கை வந்த நிலையில் தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 5 ஆம் தேதி அன்று பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் 4 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மக்கள் புது துணி எடுப்பது, பட்டாசுகள் வாங்குவது என பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர். பொதுவாக பண்டிகைகள் சனி, ஞாயிறு கிழமைகளில் வந்தால் கூட்தலாக விடுமுறை கிடைக்கும். அதை பயன்படுத்தி வெளியூர்களில் வேலை செய்பவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடுவர். இந்த நிலையில் வரும் 4 ஆம் தேதி வியாழன் கிழமை தீபாவளி வருவதால் அதற்கு அடுத்த நாள் விடுப்பு எடுக்கும் நிலை ஊழியர்களுக்கு ஏற்பட்டிருந்தது. இதனால் ஊழியர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் தீபாவளிக்கு மறுநாளான வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளித்தால் 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்றும் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இருக்கும் என கோரிக்கை விடுத்தனர். இதனை போன்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்ற தமிழக அரசு, நவம்பர் 5ஆம் தேதியையும் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 20 ஆம் தேதி சனிக்கிழமை பணிநாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 4 நாட்களிலும் விடுமுறை என்பதால் அரசு ஊழியர்களும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களும் மகிழ்ச்சியாக சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள். கொரோனா காலம் என்பதால் ஊருக்கு செல்லும் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், வரும் 04.11.2021 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விழாவினை மகிழ்ச்சியாக கொண்டாட ஏதுவாக 05.11.2021 வெள்ளிக்கிழமை அன்று அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பலதரப்பினரிடம் இருந்தும் கோரிக்கைகள் வந்தன.  எனவே தீபாவளிக்கு அடுத்த நாளான 05.11.2021 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்தும் அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 20.11.2021 (மூன்றாம் சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் ஆணை வெளியிடப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!