ஆளுநர் ஆர்.எஸ்.எஸ். ஆள்.. அவரை மக்கள் வெறுக்கிறார்கள்..! அமைச்சர் செழியன் ஆவேசம்!

Published : Dec 14, 2025, 06:26 PM IST
RN Ravi vs Govi Chezhiyan

சுருக்கம்

உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் பொருளாதாரச் சாதனைகளைப் பாராட்டியுள்ளார். அதே சமயம், ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதால் மக்கள் அவரை வெறுப்பதாக விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளை இந்தியாவே உற்று நோக்குகிறது என்றும், ஆனால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளைத் தமிழக மக்கள் வெறுக்கிறார்கள் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் செய்தியாளர்கள் சந்திப்பில் ஆவேசமாகத் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கோ.வி.செழியன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் பொருளாதாரச் சாதனைகளைப் பட்டியலிட்டார்.

முதல்வரின் பொருளாதாரச் சாதனைகள்

“மத்திய அரசு ஏற்படுத்திய இடர்பாடுகள் மற்றும் 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியின் பொருளாதார வீழ்ச்சி ஆகிய கடினமான சூழலில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றது. இந்தியாவில் எந்த மாநில முதலமைச்சரும் செய்யாத வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்னதாகவே பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.

தற்போது தனிநபர் வருமான வளர்ச்சியில் 16.5% என்ற இரட்டை இலக்கை எட்டி, தமிழ்நாடு இந்திய மாநிலங்களிலேயே முதலிடம் பிடித்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்கிய முதல்வரின் செயலால், இந்தியாவே தமிழகத்தை உற்று நோக்குகிறது.

தமிழக அரசு பொருளாதாரத்தில் சிறப்பாகச் செயல்படுவதை மத்திய அரசே பாராட்டி உள்ளதால், வேறு யாருடைய பாராட்டும் தேவையில்லை” என அமைச்சர் செழியன் கூறினார்.

கவர்னர் மீது கடும் விமர்சனம்

ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து அமைச்சர் கோ.வி.செழியன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

"தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ். கவர்னராக மாறிவிட்டார். திராவிட மாடல் அரசு எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும், அதற்கு முட்டுக்கட்டை போடுவது, காலம் தாழ்த்துவது போன்ற வேலைகளைச் செய்கிறார்.

இந்த அரசால் எந்தப் பயனும் இல்லை எனத் திரித்துப் பேசுவது, தமிழைக் கொச்சைப்படுத்துவது, சமஸ்கிருதத்தைத் தூக்கிப் பிடிப்பது போன்ற காரியங்களைச் செய்வதால்தான், கவர்னரின் செயல்பாடுகளைத் தமிழக மக்கள் வெறுக்கிறார்கள்." என்று விமர்சித்தார்.

"எந்த வகையிலும் தமிழகத்துக்குப் பயன்படாத கவர்னர் தேவையில்லை என்ற நிலை விரைவில் வரட்டும்” என்று கூறிய அவர், "கவர்னர் கலந்துகொள்ளும் பட்டமளிப்பு விழாக்களில் தாங்கள் கலந்துகொள்ளாதது, அவரது செயல்பாடுகளுக்கு எதிரான எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாகவே உள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், ஆளுநர் மத்திய அரசு மற்றும் ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதியாகச் செயல்படுவதை மட்டுமே தமிழக அரசு கண்டிக்கிறது என்றும் அமைச்சர் கோ.வி.செழியன் தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருக்கா? பனியின் தாக்கம் எப்படி இருக்கும்? வானிலை அப்டேட் இதோ!
வாட்ஸ்அப்பில் வந்த வில்லங்கம்.. டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி ரூ.52 லட்சம் அபேஸ்!