கோவை.. மூடப்பட்ட 174 செங்கல் சூளைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் மெய்யநாதன்

Ansgar R |  
Published : Aug 06, 2023, 08:51 PM IST
கோவை.. மூடப்பட்ட 174 செங்கல் சூளைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் மெய்யநாதன்

சுருக்கம்

கோவை தடாகம் பள்ளத்தாக்கு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவால் மூடப்பட்ட 174 செங்கல் சூளைகளை விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கோவை முத்தரையர் நல சங்கத்தின் 21ம் ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கடந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். 

தமிழக அரசு பள்ளி கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீடு என்ற திட்டம், அனைத்து மாணவ மாணவிகளுக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார். மேலும் மாணவ மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

இந்த நிகழ்வை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மெய்யநாதன், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு போன்ற பகுதிகளை தொழில் வளம் மிகுந்த பகுதியாக மாற்றி பல்வேறு தொழிற்சாலைகளை அமைத்து தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் என்றார். அந்த அடிப்படையில் கோவை தடாகம் பகுதியில் 174 செங்கல் சூளைகள் ஹாக்கா எனும் மலைப் பகுதிகளில் இருந்ததால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மூலமாக கடந்த காலத்தில் மூடப்பட்டதாகவும் கூறினார். 

இபிஎஸ்யிடம் அடைக்கலம் ஆவேன் என எதிர்பார்த்தால் அது ஒரு போதும் நடக்காது.! வீழ்த்தாமல் ஓய மாட்டேன்-டிடிவி ஆவேசம்

அனால், அது விரைவில் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, மூடப்பட்டுள்ள 174 செங்கல் சூலைகளையும், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். இதேபோல் கல்குவாரிகளில் வெடி வைப்பது தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், எங்காவது அதுகுறித்த குற்றச்சாட்டு இருந்தால் உடனடியாக கவனத்தில் எடுத்து அதுபோன்று நடக்காமல் பார்த்து கொள்ளப்படும் என்றும் கூறினார்.  

கட்டுமானத்திற்கு மிக முக்கியமானதாக கருதப்படும் எம்செண்ட், ஜல்லி போன்றவை தேவைப்படுவதால் இரண்டையும் கருத்தில் கொண்டு இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார் அமைச்சர். மேலும் காவிரி மற்றும் உப நதிகள், தாமிரபரணி ,வைகை போன்ற நதிகளை பாதுகாப்பதற்காக மிக முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். 

காவிரி ஆற்றை பொருத்தவரை நடந்தாய் வாழி காவிரி என்ற திட்டத்தின் மூலம் அதனை புனரமைக்க 10 பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஒன்றிய அரசுக்கு 1885 கோடியில் கருத்துருக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த பத்து சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பட்சத்தில் முழுவதுமாக அனைத்து ஆறுகளும், நதிகளும் தூய்மையாக மாற்றி, ஆறுகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதேபோல் பொது சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல் சாயக் கழிவுகளை ஆறுகளை கலந்து விடும்  பட்டறைகளை மூடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை சாயப்பட்டறை உரிமையாளர்களிடம் தெரிவித்து வரும் நிலையில், அதற்காக  சிறப்பு குழு அமைத்து  கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார். 

இயற்கை மட்டுமல்லாது நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்பதே முதலமைச்சரின் முக்கியமான திட்டம் என்றும் குறிப்பிட்ட அமைச்சர், நீர்நிலைகளில் சாய கழிவுகளை கலப்பது என்பது தாய்ப்பாலில் விஷத்தை கலப்பது போன்றது என்பதால், அனைவரும் அது போன்ற தவறுகளை செய்யாமல் தொழில்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவிறுத்தினார்.

TN Rain Alert : மக்களே உஷார்.. 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தேர்தல் நேரத்தில் மடிக்கணினி..? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய நயினார்..!
பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை..! ONGC சொத்துகள் சேதம்.. விவசாய சங்க தலைவருக்கு நீதிமன்றம் அதிரடி