
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இயல்பைவிட கூடுதலாக 2 செல்சியஸ் முதல் 3 செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கோடை காலம் துவங்கியுள்ளது. இதை அடுத்து வெயில் கொளுத்தி வருகிறது. தற்போது தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு வெயில் இயல்பு நிலையில் இருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது அடிக்கும் வெயிலை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திண்டாடி வரும் நிலையில் இன்னும் வெயில் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது மக்களை மேலும் சோர்வடைய செய்துள்ளது. தமிழகத்தில் வெயில் கடுமையாக இருந்து வருவதால் வெப்ப சலனம் ஏற்பட்டுள்ளது.
அதன் விளைவாக மன்னார் வளைகுடா, உள் தமிழக பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல காற்று சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக மேற்கு தொடர்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் கன்னியாகுமரி நெல்லை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இதுஒருபுறம் இருக்க மறுபுறம் வெயில் வாட்டி வாதைக்கிறது. அதிகப்படியான இடங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. குறிப்பாக கரூரில் 104 டிகிரி வெயில் வாட்டியது. அதே போல் ஈரோடு, திருச்சி, மதுரையில் 100 டிகிரியும், சென்னை தர்மபுரி, சேலம், திருத்தணி 99 டிகிரி வெயில் நிலவியது.
இதனை தொடர்ந்து பசிபிக் கடல்மட்டத்தில் அதிரிகரித்து வரும் வெப்பம் காரணமாக கடல் காற்றில் வெப்பம் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இயல்பைவிட கூடுதலாக 2 செல்சியஸ் முதல் 3 செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்பட்டாலும் வெப்பம் 37 டிகிரி செல்சியஸ் 99 டிகிரியாக இருக்கும் என தெரியவருகிறது. தமிழ்நாட்டில் பல இடங்களில் வெயில் கடுமையாக இருப்பதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நோயாளிகள் உள்ளிட்டோர் பாதுகாப்ப இருக்க வேண்டும் எனவும் கோடைகாலத்திற்கு ஏற்ற உணவுகளை மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்வது நல்லது என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.