அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்படும் பால் கலப்படம்...!!! – வசமாக சிக்கும் உற்பத்தியாளர்கள்...

 
Published : Jun 12, 2017, 11:03 AM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்படும் பால் கலப்படம்...!!! – வசமாக சிக்கும் உற்பத்தியாளர்கள்...

சுருக்கம்

Subsequent detection of milk contamination

மதுரை முகாமில் செய்யப்பட்ட பரிசோதனையில் கொழுப்பின் அளவு குறைந்திருந்ததால் பாலில் கலப்படம் செய்யபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சில தினங்களுக்கு முன்பு சில தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாக பகீர் குற்றசாட்டை எழுப்பினார்.

மேலும் பாலை புனேவில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல் அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து புனேவின் ஆய்வு மையம் எந்த பாலும் எங்களிடம் பரிசோதனைக்கு வரவில்லை என தெரிவித்தது. இதனால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது சொந்த ஆதாயத்திற்காக குற்றம் சாட்டி வருவதாக எதிர்கட்சிகள் குற்றசாட்டுக்களை எழுப்பினர்.

இதைதொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நேரில் அழைத்து ஆலோசனை நடத்தினார். மேலும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கூறியுள்ளார்.

பின்னர், பாலின் தரத்தை கண்டறிய தமிழகத்தில் ஆய்வு முகாம் நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி முன்னோடியாக மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக, பாலின் தரத்தை கண்டறிய இலவச பரிசோதனை முகாம் பல்வேறு இடங்களில் நத்தப்பட்டு வருகிறது.

கடந்த 3 தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட சோதனையில் ஆய்வுக்கு வந்த 108 மாதிரிகளில் ஒரு மாதிரியில் மட்டும் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் மேலூர் முகாமில் இன்று இதுவரை 85 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் ஒரு மாதிரியில்  பால் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சோதனையில் பால் கொழுப்பு அளவு3.5 % இருப்பதற்கு பதிலாக 3% இருப்பது தெரியவந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!